தமிழ்ரைம்ஸ்.காம்
நாம் வழிவழியாக கற்று வந்த பாடல்கள் நினைவில் இருந்தாலும் அதன் வரிகள் பலவற்றை நாம் மறந்து இருப்போம்.
அந்த வரிகளை எழுத்து வடிவில் உங்களுக்கு குடுப்பதற்கான சிறிய முயற்சியின் பயனால் உருவானதே இந்த வலைத்தலம்.
இங்கு கவிஞர் அழ வள்ளியப்பா, கவிமணி தணிகை உலகநாதன், குருவிக் குடிலார், பேராசிரியர் கா நமச்சிவாயர்
மற்றும் நாக முத்தையா எழுதிய பாடல்கள் முடிந்தவரை கொடுத்துள்ளோம்.
தினமும் உங்கள் குழந்தைகளுக்ககு சொல்வதற்காகவே
இங்கு குட்டி குட்டி
கதைகள் உள்ளன.
* முல்லா கதைகள்
* அக்பர் பீர்பால்
* தென்னாலி இராமன் கதைகள்
சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். உங்கள் குழந்தைகளுக்க கற்றுக்கொடுப்பதற்காக இங்கு பல பாரதியார் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பலன் தரும் ஸ்லோகங்கள் மனிதர்கள் தங்கள் தேவைகளை கடவுளிடம் அறிவிக்க பிரார்த்தனை, விரதம், காணிக்கை என பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் மந்திரங்கள். நோய்தீர குழந்தைப் பேறு கிடைக்க, திருமணம் இனிதாக அமைய, செல்வச் செழுமை பெற... இப்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றித் தரும் இனிய ஸ்லோகங்கள் பலவற்றை நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
கதைகளை கதைகளாக சொல்லுவதைவிட அதையே பாடல்களாக கூறும் போது மனதில் விரைவாகப் பதியும், மற்றும் இக்கதைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆடலுடன் கூடிய பாடல்களாக சொல்லித்தர முடியும்.
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
எவ்வளவு வருடங்கள் ஆனாலும், பல தமிழ் பாடல்களை நம்மால் மறக்க முடியாது. எடுத்துகாட்டாக ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் என்பன. இப்பகுதியில் எங்களால் இயன்ற தமிழ் பாடல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும்.
இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால் ஃபேஸ்புக்கில்(FACEBOOK) லைக் பன்னவும்.